×

சென்னையில் ராயபுரம் மண்டலத்தில் அதிகபட்சமாக 1,423 பேர் கொரோனா பாதிப்பு: மண்டல வாரியாக அறிவிப்பை வெளியிட்டது மாநகராட்சி

சென்னை: சென்னையில் ராயபுரம் மண்டலத்தில் அதிகபட்சமாக 1,423 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மாநகராட்சி தெரிவித்துள்ளது. கோடமபாக்கத்தில் 1,137 பேரும், திருவிக நகரில் 900 பேரும், தேனாம்பேட்டையில் 822 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளது. அண்ணாநகரில் 610 பேரும், வளசரவாக்கத்தில் 544 பேரும், தண்டையார்பேட்டையில் 723 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அயைாரில் 413 பேருக்கும், அம்பத்தூரில் 330 பேருக்கும், திருவெற்றியூரில் 182 பேருக்கும், மாதவரத்தில் 155 பேருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மணலியில் 100 பேருக்கும், பெருங்குடியில் 96 பேருக்கும், ஆலந்தூரில் 84 பேருக்கும், சோழிங்கநல்லூரில் 109 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தகவல் அளித்துள்ளது.


Tags : Chennai ,Rayapuram Zone , Maximum number , 1,423 Coronal Impacts,Rayapuram Zone in Chennai
× RELATED வட சென்னை மக்களின் நீண்ட நாள் கோரிக்கை...