×

10-ம் வகுப்பு தேர்வு மாற்றம் எதிரொலி: அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டிய அவசியம் இல்லை.... பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை...!

சென்னை: அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டிய அவசியம் இல்லை என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் 24ம் தேதியுடன் பிளஸ் 2 தேர்வுகள் முடிந்த நிலையில் பிளஸ் 1 தேர்வுகள் மார்ச் 26ம் தேதி முடிய  இருந்தன. ஆனால், கொரோனா வைரஸ்  பாதிப்பு காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இதனால். பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி, பிளஸ் 1 தேர்வு ஒன்று, 10-ம் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு என ஏற்கனவே  திட்டமிடப்பட்டிருந்த கால அட்டவணைப்படி எதுவும் நடத்த முடியாமல் போனது.

தொடர்ந்து, 10-ம் வகுப்பு தேர்வுகள் ஜூன் 1ம் தேதி முதல் 12ம் தேதி வரை நடக்கும். ஒத்தி வைக்கப்பட்ட பிளஸ் 1 தேர்வு ஜூன் 2ம் தேதி நடத்தப்படும். பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி வருகிற 27ம் தேதி தொடங்கப்படும் என்று  தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே, ஊரடங்கு உத்தரவும் மே 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இருப்பினும், கொரோனா காலத்தில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்துவது அவர்களின் மனநிலை பாதிக்கும் , அச்சப்படுவார்கள்  என பல்வேறு தரப்பினர் தேர்வை ஒத்திவைக்க  கோரிக்கை விடுத்தனர்.

தொடர்ந்து, நேற்று, 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அமைச்சர்  செங்கோட்டையன், முதல்வர் பழனிசாமியிள் ஒப்புதலுடன் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தார். அதன்படி, ஜூன் 15-ம் தேதி முதல் ஜூன் 25-ம் தேதி வரை 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும்  என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய 11-ம் வகுப்பு தேர்வு ஜூன் 16-ம் தேதி நடைபெறும் என்றும் 12-ம் வகுப்பு மறு தேர்வு ஜூன் 18-ம் தேதி நடைபெறும் என்றும் தெரிவித்தார்.

இதற்கிடையே,  முன்னதாக, ஜூன் 1-ம் தேதி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெறும் என்று அரசு அறிவித்ததால், அரசு, உதவி பெறும் மற்றும் பகுதி உதவி பெறும்( தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை) பள்ளிகளில்  பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்கள் வேறு மாவட்டங்களில் தற்போது தங்கி இருப்பின் அவர்கள் தற்போது பணிபுரியும் பள்ளி அல்லது சார்ந்த மாவட்டத்திற்கு 21.05.2020-ற்குள் வந்து இருக்க வேண்டும். அதனை சார்ந்த பள்ளித் தலைமை  ஆசிரியர் உறுதி செய்து வராத ஆசிரியர்கள் பற்றிய விவரங்களை சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலரிடம் 21.05.2020 காலை 11 மணிக்குள் தெரிவிக்கப்பட வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் தேர்வு மாற்றம் செய்யப்பட்டுள்ளதால், அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டிய அவசியம் இல்லை என அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தவிட்டுள்ளது. பிளஸ்2 விடைத்தாள் திருத்தும் பணிக்காக முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் வரும் 26-ம் தேதிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும். முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணிக்கு வருவதை தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்யவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 10-ம் வகுப்பு தேர்வு ஒத்திவைக்கப்பட்டதால், முன்னர் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை வாபஸ் பெறப்பட்டதாகவும் அறிவித்துள்ளது.


Tags : school ,teachers ,10th Grade Exam Change , 10th Grade Exam Change
× RELATED தொலை தூரத்தில் தேர்தல் பணி ஆசிரியர் கூட்டணி எதிர்ப்பு