காஞ்சிபுரம்: கடந்த 2009ம் ஆண்டு மே மாதம் 18ம் தேதி இலங்கை முள்ளிவாய்க்கால் பகுதியில் நடந்த படுகொலையை கண்டித்து, காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட மதிமுக சார்பில் , மாவட்ட மதிமுக செயலாளர் வளையாபதி தலைமையில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடந்தது. பாலாறு பாதுகாப்பு கூட்டியக்கம் செயலாளர் காஞ்சி அமுதன், தன்னாட்சி தமிழகம் பொறுப்பாளர்கள் தாண்டவமூர்த்தி, பழனி, திராவிடர் விடுதலை கழகம் பொறுப்பாளர் ரவி பாரதி, மதிமுக நகர செயலாளர் மகேஷ், அருள், ஏகாம்பரம், வெங்கடேசன், குணசேகர், ராமானுஜம், நாமதேவன்,பாபு, சரவணன் இளவேனில் உள்பட பலர் கலந்துகொண்டனர். இதேபோன்று ஆம் ஆத்மி கட்சி சார்பில் மாநில ஒருங்கிணைப்பாளர் சுதா தர்மலிங்கம் தலைமையில் காஞ்சிபுரத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு தினம், சுடர் ஏந்தி அனுசரிக்கப்பட்டது.