×

ஊரடங்கில் தளர்வு எதிரொலி: தமிழகத்தில் ஆர்டிஓ அலுவலகங்கள் திறப்பு

சென்னை: ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்ட பிறகு தமிழகத்தில் ஆர்டிஓ அலுவலகங்கள் செயல்பட துவங்கியுள்ளது.  தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நேற்று முன்தினம் முதல் 50 சதவீத ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் செயல்பட  அரசு உத்தரவிட்டது. அதன்படி தற்போது 50 சதவீத பணியாளர்களுடன் ஆர்டிஓ அலுவலகங்கள் செயல்படுகின்றன. எனவே பொதுமக்கள் லைசென்ஸ் உள்ளிட்ட பல்வேறு பணிகளை இனி மேற்கொள்ள முடியும்.  

இதுகுறித்து போக்குவரத்துத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:தமிழகம் முழுவதும் உள்ள வட்டார போக்குவரத்து கழகங்கள் ஊரடங்கு உத்தரவு காரணமாக இயங்கவில்லை. இந்நிலையில் தற்போது 50 சதவீத ஊழியர்களுடன் ஆர்டிஓ அலுவலகங்கள் செயல்பட துவங்கிவிட்டது. மேலும் வாகனப்பதிவு, லைசென்ஸ் வழங்குதல், தகுதிச்சான்று பெறுதல், புதுப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளும் துவங்கிவிட்டது. எனவே பொதுமக்கள் இதை பயன்படுத்திக்கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Tamil Nadu ,Opening ,RTO offices , Curfew, Tamil Nadu , RTO Offices
× RELATED வாக்குப்பதிவுக்கு 3 நாட்களே உள்ள...