×

ஜாபர்கான்பேட்டை பகுதியில் ஆவின் பால் பூத் ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னை: சென்னையில் ஆவின் பால் பூத் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை ஜாபர்கான்பேட்டை பகுதியை சேர்ந்த 48 வயது நபர் ஒருவர், அங்குள்ள ஆவின் பால் பூத் நிலையத்தில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த சில நாட்களாக இருமல் மற்றும் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த நிலையில்,  மருத்துவ பரிசோதனை செய்துகொண்டார். இதில், நேற்று அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது மனைவி, மகன், மகள் ஆகியோருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, அப்பகுதியில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

மேலும், அவருடன் தொடர்பில் இருந்த பலருக்கும் பரிசோதனை நடத்த சுகாதாரத் துறையினர் முடிவு செய்துள்ளனர். பால் வாங்க வந்த வாடிக்கையாளர் மூலமாகவே அவருக்கு தொற்று ஏற்பட்டிருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுகிறது. ஆவின் பால் பூத் ஊழியர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதால் வாடிக்கையாளர்களுக்கும் தொற்று பரவி இருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சுகாதாரத்துறை மேற்கொண்டு வருகிறது.


Tags : Coroner ,Paul Booth ,Aavin Booth , Zafarganpet, Aavin , servant, Corona
× RELATED கொடநாடு விவகாரம் இபிஎஸ், ஓபிஎஸ் இன்று கவர்னரிடம் முறையிட முடிவு