×

ஊராட்சி கழக செயலாளர் பொறுப்புகள் இன்று முதல் ரத்து; விரைவில் மாற்று பொறுப்பு வழங்கப்படும்: அதிமுக அறிவிப்பு

சென்னை: தமிழக மாவட்டங்களுக்குட்பட்ட ஒன்றிய அமைப்பின் கீழ் செயல்படும் ஊராட்சி செயலாளர் பொறுப்பு இன்று முதல் ரத்து செய்யப்படும் என்று அதிமுக அறிவித்துள்ளது. ஊராட்சி செயலாளர்களாக பணியாற்றியவர்களுக்கு விரைவில் மாற்று பொறுப்பு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் அதிமுகவில் தகவல் தொழில்நுட்ப பிரிவுச் செயலாளர், துணை நிர்வாகப் பொறுப்புகள் நான்காக பிரிக்கப்பட்டுள்ளது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பாக தற்போது அதன் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள்.

இது குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், அதிமுக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களுக்கு உட்பட்ட ஒன்றியக் கழக அமைப்புகளின் கீழ் செயல்பட்டு வரும் அனைத்து ஊராட்சிக் கழகச் செயலாளர் பொறுப்புகளும் இன்று முதல் ரத்து செய்யப்படுகிறது. ஊராட்சிக் கழக செயலாளர்களாகப் பணியாற்றி வந்த அனைவருக்கும் விரைவில் மாற்றுப் பொறுப்பு வழங்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதிமுகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு சென்னை, வேலூர், கோவை, மதுரை என நான்கு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் அறிவிப்பில், அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவுச் செயலாளர் மற்றும் துணை நிர்வாகப் பொறுப்புகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் அனைவரும் இன்று முதல் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள். அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவின் நிர்வாக வசதியைக் கருத்தில் கொண்டு, சென்னை, வேலூர், கோவை, மதுரை என நான்கு மண்டலங்காளப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு மண்டலமும் ஒரு சில மாவட்டங்களை உள்ளடக்கி செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : AIADMK ,Panchayat Council , Secretary to the Panchayat Council, Responsibility, Cancellation, AIADMK
× RELATED திருவள்ளூர் மாவட்டம் விச்சூரில் கொலை...