×

ஊரடங்கு முடியும் வரை சென்னையில் உள்ள 407 அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்கப்படும் : அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவிப்பு

சென்னை : தமிழகத்தில் தற்போது 4ம் கட்ட ஊரடங்கு மே மாதம் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் அம்மா உணவகங்களில் ஏற்கெனவே 17ம் தேதி வரை வழங்கப்பட்டு வந்த இலவச உணவு முறை ஊரடங்கு முடியும் வரை நீட்டிக்கப்படும் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவித்துள்ளார்.

தமிழகத்திலேயே சென்னையில் தான் அதிகபட்சமாக 407 அம்மா உணவகங்கள் இயங்கி வருகின்றன. சென்னையில் உள்ள 407 அம்மா உணவகங்கள் ஊரடங்கு உத்தரவு காலம் முதலே கடந்த 40- 45 நாட்களாக , மக்களுக்கு இலவச உணவு வழங்கி வந்தது. தினந்தோறும் ஏழை எளிய மக்கள், ஆட்டோ ஓட்டுனர்கள், கூலி தொழிலாளி மற்றும் சாலை வாசிகள் என பலரும் அம்மா உணவகங்கள் மூலம் பயனடைந்து வந்தனர்.
இந்த நிலையில் 3ம் கட்ட ஊரடங்கு மே 17ம் தேதியுடன் முடிவடைந்ததால், நேற்று முதல் மீண்டும் அம்மா உணவகங்களில் உணவுக்காக கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இது வேலையில்லாமல் உணவுக்காக திண்டாடி வரும் ஏழை மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அம்மா உணவகங்களில் கட்டணம் வாங்குவது மக்களுக்கு மிகவும் மேலும் கஷடத்தை கொடுக்கும் என்பதால் ஊரடங்கு காலகட்டத்தில் இலவசமாக உணவு வழங்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள்  வேண்டுகோள் விடுத்த சூழ்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியின் உத்தரவின்பேரில் சென்னையில் உள்ள 407 அம்மா உணவகங்களிலும் மே 31 வரை மூன்று வேளையும் இலவசமாக உணவு வழங்கப்படும் என்று அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.

Tags : SB Velumani ,mom restaurants ,Chennai ,mummy restaurants , Curfew, Chennai, 407, mother restaurants, free food, Minister SB Velumani
× RELATED சென்னையில் மதுபான விடுதி மேற்கூரை...