×

ஏரி, குளங்கள் நிரம்பின

கடவூர்: தரகம்பட்டி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் ஏரி குளங்கள் பாதி நிரம்பின. பலத்த காற்றால் வீடுகள் சேதம் அடைந்தன. கடவூர் ஒன்றியம் கடவூர், தரகம்பட்டி, தேவர்மலை, பாலவிடுதி, மலைம்பட்டி, மாவத்தூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு பலத்த காற்று மின்னலுடன் மழை பெய்தது. இதன் காரணமாக வறண்டு கிடந்த ஏரி மற்றும் குளங்கள் பாதி கொள்ளளவு நிரம்பின. இதனால் இப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைதுள்ளனர். பாலிடுதியில் 126 மில்லிமீட்டர், மைலம்பட்டியில் 83 மில்லி மீட்டர், கடவூரில் 70 மில்லி மீட்டர் மழை பதிவானது. மேலும் தேவர்மலை ஊராட்சி குடிவண்டையில் பலத்த காற்றால் குமாரசாமி, வேலுச்சாமி மற்றும் வெங்கிடுசாமி உள்ளிட்டோருக்கு சொந்தமான வீடுகள் சேதம் அடைந்தன. தகவலறிந்த தேவர்மலை கிராம நிர்வாக அலுவலர் முத்துச்சாமி நேரில் சென்று சேதமடைந்த வீடுகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Tags : lake , lake , full , ponds
× RELATED பண்ருட்டியில் அடுத்த எஸ். ஏரி பாளையம். கிராமத்தில் தேர்தல் புறக்கணிப்பு