நாகை: நாகையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் முத்தரசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. ஊரடங்கால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு நிவாரணமாக தலா ரூ.10,000 வழங்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அமைப்பு சாரா தொழிலாளர்கள், விவசாயத் தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நிவாரணம் தர வலியுறுத்தியுள்ளனர்.