×

பட்டது போதும்பா...சட்டீஸ்கர், பீகாருக்கு 3,962 பேர் பயணம்

சென்னை: ஊரடங்கு தளர்வுக்கு பிறகு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ஏற்கனவே 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அனுப்பப்பட்டுள்ளனர். நேற்றும் 3 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. சட்டீஸ்கர் மாநிலத்துக்கு பிற்பகல் 3 மணிக்கு 1,068 பயணிகளும், பீகார் மாநிலத்துக்கு இரவு 7 மணிக்கு 1,494 பேரும், இரவு 9 மணிக்கு 1,400 பேரும் புறப்பட்டு சென்றனர். இந்த 3 சிறப்பு ரயில்கள் மூலம் 3,962 வடமாநில தொழிலாளர்கள் சென்னையில் இருந்து அவரவர் மாநிலங்களுக்கு சென்றனர்.இன்றும் பீகார், மேற்கு வங்காளம், நாகாலாந்துக்கு 3 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.


Tags : Bihar ,Chhattisgarh , Travel to Chhattisgarh, Bihar, 3,962
× RELATED பீகார் தலைநகர் பாட்னாவில் ஓட்டலில் பயங்கர தீ விபத்து..!!