×

17 பேருக்கு கொரோனா பாதிப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட 68 பேர் இதுவரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். குன்றத்தூரைச் சேர்ந்த வெல்டர் மற்றும் காஞ்சிபுரத்தை அடுத்த பெரும்பாக்கத்தைச் சேர்ந்த விவசாயி மற்றும் ஆதனூரைச் சேர்ந்த ஒருவர் என 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாங்காடு பகுதியைச் சேர்ந்த 11 பேர், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 3 பேர், படப்பை பகுதியைச் சேர்ந்த ஒருவர், குன்றத்தூர் சேர்ந்த 2 பேர் என 17 பேருக்கு  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர் எண்ணிக்கை 3 ஆகவும்,  பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை  203 ஆகவும் மாறியுள்ளது.


Tags : persons , Corona effect , 17 persons
× RELATED கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான...