×

உயிரியல் பூங்கா விலங்கு தத்தெடுப்பு திட்டத்தில் வெள்ளை புலியை தத்தெடுத்த நடிகர் சிவகார்த்திகேயன்

சென்னை: வண்டலூர் உயிரியல் பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளோடு ஒரு சிறந்த பந்தத்தை அமைக்கும் விதமாக, ‘விலங்கு தத்தெடுப்பு’ திட்டம் நடைபெற்று வருகிறது.  இதன் மூலம் மக்கள் தங்களுக்கு பிடித்த விலங்குகளுக்கு உணவு மற்றும் பராமரிப்பு செலவை ஏற்றுக்கொள்ளலாம். இவ்வாறு, அவர்கள் அளிக்கும் தொகைக்கு ஏற்றவாறு வரி விலக்கு 80 (ஜி)க்கான ரசீது, இலவச பூங்கா வசதிகள் போன்ற பல சலுகைகள் வழங்கப்படும்.

மக்களின் வசதிக்காக இந்த சேவை இணையதள மூலம் பெற்றுக்கொள்ளலாம். http:www/aazp/in/animal-adoption/ என்ற இணைய முகவரியில் விலங்கு தத்தெடுப்பு பற்றிய அனைத்து விவரங்களும் வழங்கப்பட்டுள்ளது. இணைய வழியில் தத்தெடுப்பு தொகையை செலுத்தவும் முடியும். நேற்று தமிழ் திரைப்பட நடிகர் சிவகார்த்திகேயன் ‘அனு’ என்னும் வெள்ளை புலியை, மேலும், நான்கு மாதங்களுக்கு மே 2020 முதல் தத்தெடுத்துள்ளார். இவர் 2018ம் ஆண்டு முதல் இப்புலியை தத்தெடுத்து வருகிறார். இப்புலி அண்ணா  உயிரியல் பூங்காவில் உள்ள 14 வெள்ளைப்புலிகளில் ஒன்றாகும் என்பது குறிப்பிடதக்கது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



Tags : Sivakarthikeyan , Zoo Animal, Adoption, White Tiger, Actor Sivakarthikeyan
× RELATED குரங்கு பெடல் வெளியிடும் சிவகார்த்திகேயன்