×

படப்பிடிப்புகளுக்கு அனுமதி அமைச்சரிடம் பெப்சி கோரிக்கை

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மார்ச் 19ந் தேதி முதலே சினிமா, சின்னத்திரை படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தப்பட்டது.
தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டு வரும் நிலையில் பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, இயக்குனர்கள் சங்கத் தலைவர் ஆர்.வி.உதயகுமார் ஆகியோர் செய்தி விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜை சந்தித்து கோரிக்கை விடுத்தனர். பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த ஆர்.கே.செல்வமணி. தற்போது அரசு படப்பிடிப்பு தவிர்த்த மற்ற பணிகளுக்கு அனுமதி கொடுத்துள்ளது.

அரசு அறிவுறுத்திய விதிமுறைகளை கடைபிடித்து அந்த பணிகள் நடந்து வருகிறது. அதேபோல சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கும் நிபந்தனையுடன் அரசு அனுமதிக்க வேண்டும். அதனை நாங்கள் கடைபிடிப்போம். இதனால் 5 ஆயிரம் பேர் உடனடி வேலை வாய்ப்பு பெறுவார்கள். என்றார்.இதேபோல நேற்று அமைச்சர் கடம்பூர் ராஜை தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் சந்தித்தனர். ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள பகுதிகளில் திரையரங்குகளை திறக்க அனுமதிக்க கோரினர்.

Tags : Minister , Films, Minister, fefsi, Corona Virus
× RELATED அமைதிப்பூங்காவான தமிழகம் என மீண்டும்...