×

தமிழகம் முழுவதும் கிராமங்களில் இன்று முதல் சலூன் கடைகள் திறப்பு

சென்னை: சென்னை காவல் துறை எல்லைக்கு உட்பட்ட பகுதிகளை தவிர மற்ற ஊரக பகுதிகளில் முடி திருத்தும் நிலையங்கள் இன்று முதல் இயங்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் நோய் தொற்றின் தடுப்பு பணிகளை தமிழக அரசு  தீவிரமாக மேற்கொள்ளும் வகையில் கடந்த 24.3.2020 முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது.  கொரோனா வைரஸ் நோய் தொற்றின் தாக்கத்தை கட்டுப்படுத்த தொடர்ந்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் எடுத்து வருகிறது.

 நோய் தொற்று குறைய குறைய தமிழ்நாடு அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக, தற்போது முடி திருத்தும் தொழிலாளர்களின் கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்து, பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதி, இதர மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் தவிர ஏனைய ஊரக பகுதிகளில் முடி திருத்தும் நிலையங்கள் இன்று (19ம் தேதி) முதல் இயங்குவதற்கு உத்தரவிட்டுள்ளேன்.

இந்த முடிதிருத்தும் நிலையங்களில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் வரும் வாடிக்கையாளர்கள் கண்டிப்பாக சமூக இடைவெளியினை பின்பற்றுமாறும், கையுறை அணிந்து முடி திருத்துமாறும், முககவசங்கள் அணிவதை உறுதி செய்யுமாறும், கடையின் உரிமையாளர் முடி திருத்தும் நிலையங்களில் ஒரு நாளைக்கு ஐந்து முறை கிருமி நாசினியை தெளிக்குமாறும், அடிக்கடி சோப்பு கொண்டு கை கழுவதை உறுதி செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Tags : Saloon shops ,villages ,Tamil Nadu Saloon ,shops , Tamil Nadu, Villages, Saloon Shops, Corona, Curfew
× RELATED திருப்பத்தூரில் 14 கிராமங்கள் தேர்தல் புறக்கணிப்பு