×

கொரோனா சிகிச்சை பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்களுக்கு சோதனை கட்டாயம் : நெறிமுறைகளை வெளியிட்டது ஐ.சி.எம்.ஆர்

டெல்லி : இந்தியாவில் கொரோனா தொற்று பரிசோதனையை மேலும் விரிவுப்படுத்த வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கையை ஒரு லட்சத்தை நெருங்கிவிட்டதால் பரிசோதனையை விரிவுப்படுத்த மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது. இதையடுத்து கொரோனா சோதனை செய்வதற்கான திருத்தப்பட்ட உத்தியை இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழு வெளியிட்டுள்ளது.அதன்படி,

*கொரோனா சிகிச்சை பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியருக்கு கட்டாயம் பரிசோதனை நடத்த வேண்டும்

*தூய்மை பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்

*கொரோனா பாதித்தவருடன் தொடர்பில் இருந்தவர்களில் நோய் அறிகுறி உள்ளவர்களுக்கு கட்டாயம் பரிசோதனை.

*புலம்பெயர் தொழிலாளர்களுக்கு நோய் அறிகுறி இருந்தால் பரிசோதனை நடத்தப்பட வேண்டும்.

*கொரோனா பரவல் அதிகமுள்ள இடங்களில் காய்ச்சல், இருமல் உள்ளவர்களுக்கு சோதனை அவசியம் மேற்கொள்ள வேண்டும்.

*கடந்த 14 நாட்களில் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களில் காய்ச்சல், சளி அறிகுறி உள்ளவர்களுக்குச் சோதனை செய்ய வேண்டும். ஒருவருக்கு கொரோனா இருப்பது சோதனையில் உறுதிப்படுத்தப்பட்டால், அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு அறிகுறி இருந்தால் சோதனை செய்ய வேண்டும்.

*கடுமையான மூச்சுத்திணறல் நோய்த்தொற்று நோயாளிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.  

*சோதனை செய்யாததைக் காரணங்காட்டிப் பேறுகாலம் உள்ளிட்ட அவசர மருத்துவ உதவிகளைத் தாமதப்படுத்தக் கூடாது. 


Tags : Coroner Treatment Tests ,Doctors ,nurse , Corona, Therapy, Work, Doctors, Nurse, Testing, Forced, Ethics, Released, ICMR
× RELATED செவிலியர்களுக்கு தபால் வாக்கு: பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் கோரிக்கை