டெல்லி: அனைத்து பொருட்களையும் விற்பனை செய்ய ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கட்டுப்படுத்தப்பட்ட பகுதி தவிர்த்து மற்ற இடங்களில் ஆன்லைன் விற்பனைக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அத்தியாவசிய பொருட்களை விற்க அனுமதி அளித்த நிலையில் தற்போது அனைத்து பொருட்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு அனுமதி தந்தாலும் அந்தந்த மாநில அரசுகளின் முடிவே இறுதியானது என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.