சென்னை: ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். டெல்டா மாவட்ட விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்க ஆணையிடப்பட்டுள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100.1 அடியாகவும் நீர் இருப்பு 64.85 டி.எம்.சி. ஆகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.