×

ஜூலை 1ம் தேதி முதல் 15ம் தேதி வரை 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெறும் : தேர்வு அட்டவணையை வெளியிட்டது சிபிஎஸ்இ!!


டெல்லி : ஜூலை 1ம் தேதி முதல் 15ம் தேதி வரை 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெறும் என்று சிபிஎஸ்இ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, நாடு முழுக்க லாக்டவுன் நடைமுறையில் இருப்பதால், சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகள் தேதி குறிப்பிடப்படாமல், பாதியில், ஒத்தி போடப்பட்டிருந்தது. இந்த நிலையில் சமீபத்தில் மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால் ஒரு அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். அதில் ஜூலை 1-ம் தேதி முதல் 15ம் தேதி வரை சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில், விடுபட்ட தேர்வுகள் நடைபெறும் என்று அறிவித்திருந்தார். ஆனால், தேர்வு கால அட்டவணை அறிவிக்கப்படாத நிலையில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான கால அட்டவணை மே 18ம் தேதி திங்கள்கிழமை வெளியிடப்படும். என்று தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் தமிழகம் உள்பட நாடு முழுவதும் சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வுக்கான அட்டவணை வெளியீடப்பட்டது.  மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தனது ட்விட்டர் பக்கத்தில் அட்டவணையை வெளியிட்டு இருக்கிறார். அதன்படி, ஜூலை 1 முதல் 15ம் தேதி வரை தமிழகம் உள்பட நாடு முழுவதும் 12ம் வகுப்பு தேர்வு  நடைபெறுகிறது.இது இரண்டு பகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஒரு அட்டவணையும்,  டெல்லி மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கு ஒரு தேர்வு அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது. டெல்லியில் விடுபட்ட சிபிஎஸ்இ 10ம் வகுப்பு போதுத் தேர்வுக்கான தேதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் முகக்கவசம் அணிவதோடு, சானிடைசர் கொண்டு வர வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.


Tags : Class XII General Elections ,CBSE ,Class X ,Elections , CBSE, General Elections, Attorney General, Ramesh Bokriyal
× RELATED விருகம்பாக்கம் பாலலோக் சிபிஎஸ்இ...