×

மாநிலத்தில் இதுவரை 86 பேருக்கு கொரோனா உறுதி: சத்தீஸ்கரில் அடுத்த 3 மாதங்களுக்கு 144 தடையை நீட்டித்து முதல்வர் பூபேஷ் பாகேல் உத்தரவு...!

ஜெய்பூர்: இந்தியா உள்ளிட்ட 210 நாடுகளும் மேலாக கொரோனா வைரஸ் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதற்கிடையே, மே 17ம் தேதிக்கு பிறகான திட்டம் குறித்து அனைத்து மாநில முதல்வர்களுடன் கடந்த 11-ம் தேதி வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து, 5வது முறையாக கடந்த 12-ம் தேதி இரவு 8 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது, நாட்டின் 4ம் கட்ட தேசிய ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படுவது மற்றவற்றில் இருந்து முற்றிலும் வித்தியாசமானதாக இருக்கும்.

4ம் கட்ட ஊரடங்கை நீட்டிப்பது பற்றி மாநில அரசுகளே முடிவெடுக்கலாம். மாநில அரசுகளின் பரிந்துரைப்படி 4ம் கட்ட ஊரடங்கு நீட்டிக்கப்படும். இதுதொடர்பான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் மே 18ம் தேதிக்கு முன் வெளியிடப்படும்  என்றார். அதன்படி, 4-ம் கட்ட ஊரடங்கு மே 31-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று அறிவித்தது. இதற்கிடையே, இந்தியளவில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் உள்ள மகாராஷ்டிரா மாநிலத்தில்  ஊரடங்கு மே 31-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மாநில அரசு அறிவித்தது. தொடர்ந்து தமிழக அரசும் மே 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவித்தது. மேலும், 25 மாவட்டங்களில் போக்குவரத்து சேவைக்கும் அனுமதி  அளித்துள்ளது.

இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலத்தில் அடுத்த 3 மாதங்களுக்கு 144 தடை உத்தரவை நீட்டித்து முதல்வர் பூபேஷ் பாகேல் உத்தரவிட்டுள்ளார். கொரோனா பரவலை தடுக்கும் வகையில் 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாநில அரசு  தெரிவித்துள்ளது. இருப்பினும், சத்தீஸ்கர் மாநிலத்தில் இதுவரை 86 கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 59 பேர் குணமடைந்த நிலையில், யாரும் உயிரிழக்கவில்லை. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 19 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 பேர் குணமடைந்துள்ளனர். இந்தியளவில் கொரோனா பாதிப்புள்ள மாநிலங்களின் பட்டியில் 23-வது இடத்தில் சத்தீஸ்கர் மாநிலம் உள்ளது குறிப்பிடத்தக்கது.



Tags : Coroner ,Chhattisgarh Corona ,state , Corona confirmed to 86 people in the state so far: 144 bans in Chhattisgarh for the next 3 months
× RELATED மக்களவைத் தேர்தல்: கேரள மாநிலம்...