×

மலைப்பாதை வழியாக மக்கள் ஊடுருவலை தடுக்க செங்கோட்டையில் ரயில்வே போலீசார் தீவிர சோதனை

செங்கோட்டை: கேரளாவுக்கு மலைப்பாதை வழியாக தமிழக மக்கள் நுழைவதை தடுக்கும் பொருட்டு கேரள வனத்துறையினர் மற்றும் ரயில்வே போலீசார் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே  குழு அமைத்து சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று முதல் தமிழக ரயில்வே போலீசாரும் செங்கோட்டை போலீசாரும் தமிழக-கேரள எல்லையான  புளியரை எஸ். வளைவு பகுதிகளில்  கேரளாவிலிருந்து மலைப்பாதை வழியாக பொதுமக்கள் வருவதை தடுக்க டிராலி மூலம் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 மேலும் செங்கோட்டை, புளியரை, ஆரியங்காவு, தென்மலை வழியாக கேரளாவிலிருந்து தமிழக ரயில் பாதை  வழியாக பொதுமக்கள்  நுழைவதை தடுக்க டிராலி மூலம் தமிழக ரயில்வே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags : Railway police ,Red Fort ,highway , Railway police, Red Fort , intrusion ,people along the highway
× RELATED செங்கோட்டை அருகே மேக்கரை பகுதியில்...