சென்னை: தெற்கு வங்கக்கடலில் அதி உச்ச உயர் தீவிர புயலாக அம்பன் புயல் மாறியுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அம்பன் புயல் வடகிழக்கு திசை நோக்கி நகரும் எனவும், புயலால் மணிக்கு 180 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசும் எனவும் தெரிவித்துள்ளது. சூறாவளி காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.