×

கேரளாவில் மேலும் 14 பேருக்கு தொற்று

திருவனந்தபுரம்: கேரள  சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா நேற்று வெளியிட்ட அறிக்கை: கேரளாவில் இன்று (நேற்று) 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி  செய்யப்பட்டுள்ளது. நோய்  பாதிக்கப்பட்டவர்களில்  7 பேர்  தமிழ்நாட்டில் இருந்தும், 3 பேர் மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்தும்  வந்துள்ளனர். கொல்லம்  மாவட்டத்தில் ஒரு சுகாதாரத்துறை ஊழியருக்கு நோய் பரவியுள்ளது. தற்போது 101 பேர் பல்வேறு  மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை கேரளாவில் 497 பேர்  கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.  கேரளாவுக்கு இதுவரை வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து  வந்தவர்களின் எண்ணிக்கை 60,612 ஆகும்.

Tags : Kerala , Kerala, kerona, curfew
× RELATED தமிழக – கேரள எல்லையோர கிராமங்களில்...