சென்னை: திமுக இளைஞர் அணி, மாணவர் அணி மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள் கூட்டம் இன்று காணொலி காட்சி மூலம் நடைபெறும் என்று திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: திமுக இளைஞர் அணி - மாணவர் அணி மாவட்ட , மாநகர அமைப்பாளர்கள் கூட்டம் இன்று திங்கட்கிழமை, மாலை 5 மணியளவில், துணைச் செயலாளர்கள் முன்னிலையில் காணொலி காட்சி மூலம் நடைபெறும். அப்போது இளைஞர் அணி - மாணவர் அணி மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டும்.
கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள பதட்டமான இச்சூழலில் 10ம் வகுப்பு தேர்வு நடத்தும் பள்ளிக் கல்வித்துறையின் முடிவை கண்டித்தல், தேர்வை தள்ளிவைக்க அரசை வலியுறுத்தும் வகையில் மேற்கொண்டு எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து விவாதித்தல். இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.