×

திருச்சியில் இருந்து ஒடிசாவுக்கு தண்டவாளம் வழியாக நடந்து செல்லும் தொழிலாளர்கள்

உளுந்தூர்பேட்டை: திருச்சியில்  இருந்து உளுந்தூர்பேட்டை வழியாக ரயில்வே தண்டவாளத்தில் வடமாநில தொழிலாளர்கள், ஒடிசாவுக்கு நடந்து சென்றனர். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக தொடர்ந்து ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் தமிழகத்தில் வேலை செய்து வந்த வடமாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.  இதனால், பல்வேறு பகுதியில் வேலை செய்து வந்த வடமாநில தொழிலாளர்கள் கிடைக்கின்ற வாகனங்களில் சென்று வந்ததுடன் கடந்த சில நாட்களாக ஏராளமானவர்கள் நடந்தே தங்களது பகுதிக்கு செல்லும் நிலை ஏற்பட்டது.

இந்தநிலையில், திருச்சியில் வேலை செய்து வந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் பலர் ரயில்வே பாதையின் வழியாக நடந்தே தங்களது சொந்த ஊருக்கு திரும்பி கொண்டு வருகின்றனர். நேற்று முன்தினம் திருச்சியில் இருந்து புறப்பட்ட அவர்கள் நேற்று உளுந்தூர்பேட்டை ரயில் தண்டவாளப் பாதையின் வழியாக சென்றனர். இதனை அப்பகுதியில் வசிப்பவர்கள் பார்த்து தேவையான உதவிகளை செய்து அனுப்பி வைத்தனர்.

Tags : Trichy ,railway workers ,Odisha Trichy Orissa , Corona, Curfew, Trichy, Odisha, Railway, Workers
× RELATED திருச்சி விமான நிலையத்தில் போலி...