×

அரசுக்கு எதிராக கருத்து சொன்னவர்; அரை நிர்வாணத்தில் கிடந்த டாக்டர்: ஆந்திராவில் பரபரப்பு

விசாகபட்டினம்: கொரோனாவை கட்டுப்படுத்த தேவையான உபகரணங்கள், தான் வேலை செய்யும் மருத்துவமனையில் இல்லை என்று குற்றம் சாட்டிய அரசு மருத்துவர் சஸ்பெண்ட் ஆன நிலையில், அவரது கைகள் கட்டப்பட்ட நிலையில் அரை நிர்வாண கோலத்தில் சாலையில் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவின் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள நரசிபட்டினம் அரசு மருத்துவமனையில் பணியாற்றிய டாக்டர் சுதாகர் என்பவர், கடந்த சில தினங்களுக்கு முன் தான் பணியாற்றும் அரசு மருத்துவமனையில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு தேவையான மாஸ்க் உள்ளிட்ட உபகரணங்கள் இல்லை என்று குற்றம் சாட்டினார். இதற்காக அவரை ஆந்திர மாநில சுகாதாரத்துறை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தது.

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பின்னர், அவர் என்ன ஆனார்? எங்கு இருக்கிறார்? என்று தெரியாத நிலையில், டாக்டர் சுதாகர் நேற்று மாலை நரசிபட்டினம் அருகே சாலையில் கைகள் கட்டப்பட்ட நிலையில் அரை நிர்வாண கோலத்தில் லாரி ஒன்றின் முன் கிடந்தார். தகவலறிந்த போலீசார் அவரை மீட்டு நரசிபட்டினம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்துகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் தரப்பில் கூறுகையில், ‘பணியிடை நீக்கத்திற்கு பின் டாக்டர் சுதாகர் மாயமான நிலையில் அவரை போலீசார் கைகளை பின்புறமாக கட்டி அடித்து துன்புறுத்தினர்’ என்று கூறினர். இந்த சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Andhra Pradesh ,government ,Half Naked Doctor , Government, Doctor, Andhra
× RELATED ஆந்திர மாநிலம் விஜயவாடாவில்...