×

பயம் யார விட்டு வச்சுது.... கொரோனா அச்சத்தால் வாடிக்கையாளரின் ரூபாய் நோட்டை கழுவி வாங்கும் வியாபாரி

சின்னசேலம்: சின்னசேலத்தில் கொரோனா அச்சம் காரணமாக வியாபாரி ஒருவர் தனது கடையில் வாடிக்கையாளர்கள் கொடுக்கும் ரூபாய் நோட்டுக்களை கிருமிநாசினியால் கழுவி அதன் பின்னரே வாங்கி வருகிறார். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கடைவீதியில் உள்ள பெரும்பாலான கடைகளில் பொருள் வாங்க வரும் வாடிக்கையாளர்கள் கை கழுவ தண்ணீருடன் தனி வாளி வைத்துள்ளனர். இந்நிலையில் ஒரு கடையில் வாடிக்கையாளர்கள் கொடுக்கும் ரூபாய் நோட்டுகளை கடை உரிமையாளர் வாங்கி கிருமி நாசினியில் 10 நிமிடம் ஊறவைத்து பின்னர் தண்ணீரில் அலசி காயவைத்து கல்லாவில் வைக்கின்றார்.

இதுபற்றி அவரிடம் கேட்டபோது ரூபாய் நோட்டுகள் வழியாகவும் கொரோனா பரவும் என்று சுகாதார துறையினர் கூறுகின்றனர். இதனால்தான் நாங்கள் யார் கொடுத்தாலும் ரூ500, 2000 நோட்டுகளாக இருந்தாலும் அதை வாங்கி கழுவி தான் வைக்கிறோம் என்றனர். அதைப்போல மக்களுக்கு மீறி சில்லரை கொடுக்கும்போதும் கழுவிய நோட்டுகளையே கொடுக்கின்றனர். இதனால் அந்த கடை குறித்து பொதுமக்கள் பரபரப்பாக பேசி வருகின்றனர்.

Tags : Corona ,dealer ,customer , Corona fear, banknote, dealer
× RELATED கொரோனாவால் 4 ஆண்டு நிறுத்தப்பட்ட...