×

நிதியமைச்சர் அறிவித்த புதிய அறிவிப்புகள் சுகாதாரம், கல்வித்துறையில் சீர்த்திருத்தங்களை ஏற்படுத்தும்: பிரதமர் மோடி ட்விட்

டெல்லி: புதிய அறிவிப்புகள் சுகாதாரம், கல்வித்துறையில் சீர்த்திருத்தங்களை ஏற்படுத்தும் என பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தொழில்முனைவோரை ஊக்கப்படுத்தவும், கிராம பொருளாதாரத்தை மேம்படுத்தவும் உதவும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். பொருளாதார சீரமைப்புத் திட்டங்களுக்காக ரூ.20 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்வதாகவும்,சிறு, குறு, நடுத்தர தொழில்களை மேம்படுத்தவும் விவசாயிகள், வியாபாரிகள், தொழிலாளர்களின் நலனுக்காகவும் இந்த சிறப்பு திட்டம் அமல்படுத்தப்படும் என பிரதமர் மோடி கூறியிருந்தார்.

அதன்படி ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான சிறப்பு திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறித்து 5 கட்டங்களாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விரிவான தகவல்களை வெளியிட்டுள்ளார். அதில் சிறு, குறு தொழிலாளர்கள், நடுத்தர மக்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், விவசாயிகள், ஏழை மக்கள், விவசாயிகள், மீனவர்கள், கனிமங்கள், நிலக்கரி உற்பத்தி, ராணுவ தளவாட உற்பத்தி, மின் விநியோகம் விண்வெளி அணுசக்தி துறை, 100 வேலை திட்டம், கல்வி உள்ளிட்டவற்றிற்கு ஒதுக்கப்பட்ட நிதி மற்றும் செயல்படுத்த உள்ள திட்டங்கள் குறித்து அறிவித்தார்.

இந்நிலையில் நிதியமைச்சரின் இன்றைய அறிவிப்புகள் கல்வி மற்றும் சுகாதாரத்துறையில் மாற்றத்தை ஏற்படுத்தும் என பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்ட பதிவு; நிதியமைச்சர் அறிவித்த சலுகைகள் மற்றும் சீர்திருத்தங்கள், சுகாதாரத்துறை மற்றும் கல்வித்துறையில் மாற்றத்தக்க வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த நடவடிக்கைகள் தொழில் முனைவோருக்கு ஊக்கம் அளிக்கும். பொதுத்துறை நிறுவனங்களுக்கு உதவும். கிராமப்புற பொருளாதாரத்திற்கு புத்துயிர் அளிக்கும். மாநிலங்களின் சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு உத்வேகத்தை அளிக்கும் என தெரிவித்துள்ளார்.

Tags : Modi Dwight ,Finance Minister , Finance Minister, Health, Education, Prime Minister Modi
× RELATED பழைய பேருந்து நிலையம் எதிரில்...