டெல்லி: நிறுவனங்களுக்கு எதிராக திவால் நடவடிக்கைகள் ஓராண்டுக்கு எடுக்கப்பட மாட்டாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா காரணமாக ஏற்பட்டுள்ள கடன் தொகை கட்டாமல் இருந்தால் தவணை தவறியதாக கருதப்படமாட்டாது. மேலும் ரூ.1 கோடி வரை கடன்பாக்கி இருந்தால் தான் குற்ற நடவடிக்கை எடுக்கும் வகையில் விதி தளர்வு செய்யப்பட்டுள்ளது என மத்திய அரசு கூறியுள்ளது.