சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பயிலும் வெளிநாடு வாழ் இந்திய மாணவர்கள் தவித்து வருகின்றனர். வளைகுடா நாடுகள் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு சிறப்பு விமான சேவை இயக்காததால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. துபாய், குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் வசிக்கும் பெற்றோர்களை பார்க்க முடியாமல் 55 நாட்களாக தவித்து வருகின்றனர்.