×

ஐதராபாத்தில் விளையாட்டு காட்டும் சிறுத்தை: பிடிக்க முடியாமல் வனத்துறை திணறல்

திருமலை: ஐதராபாத்தில் லாரி கிளீனரை தாக்கி தப்பிய சிறுத்தையை பிடிக்க முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர்.தெலங்கானா, ஐதராபாத் காட்டேடா சாலையில் நடந்து சென்ற லாரி கிளீனரை சிறுத்தை ஒன்று கடந்த 14ம் தேதி தாக்கியது. பின்னர், மைலர்தேவபல்லி வழியாக ராஜேந்திரநகர் பல்கலைக்கழகம் அருகே உள்ள வனப்பகுதிக்கு தப்பிச்சென்றது. அங்கிருந்து சிலுகூர் வனப்பகுதிக்கு சிறுத்தை சென்றிருக்கலாம் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் கூண்டுகளில் இரையை வைத்து அதனை பிடிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ராஜேந்திரநகர் மற்றும் சுற்றுப்புறத்தில் வசிப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மேலும், சிறுத்தை இருப்பது குறித்த அறிகுறிகள் தெரிந்தால் தகவல் தெரிவிக்க வேண்டும் என சம்ஷாபாத் காவல்துறை துணை ஆணையாளர் பிரகாஷ் கேட்டுக்கொண்டார். சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் போலீசார் உதவியுடன் டிரோன் கேமராக்கள் மூலமாகவும் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.



Tags : Hyderabad , Hyderabad, Leopard, Forest Department
× RELATED ஐபிஎல் கிரிக்கெட்: ஐதராபாத் அணி அபார வெற்றி!.