×

வங்கியில் புகுந்து கொள்ளை முயற்சி

விக்கிரவாண்டி: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த சிந்தாமணியில் இந்தியன் வங்கி கிளை செயல்பட்டு வருகிறது. நேற்று காலை வங்கிக்கு வந்த மேலாளர், அறையில் ஜன்னல் கம்பி வெட்டி அறுத்து உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். தகவலறிந்து போலீசார் வந்து ஆய்வு செய்தனர். லாக்கர் ஏதும் உடைக்கப்படவில்லை. கண்காணிப்பு கேமரா பதிவை ஆய்வு செய்தபோது, அதிகாலை 2 மணியளவில் ஒரு வாலிபர் ஜன்னல் கம்பியை அறுத்து நுழைந்து வங்கியை நோட்டம் இடுவதும், மற்றொரு வாலிபர் வெளியே நிற்பதும், அலாரம் அடித்ததால் அவர்கள் தப்பி ஓடியதும் தெரிந்தது. இதனால் வங்கி லாக்கரில் இருந்த கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான நகைகள், பணம் தப்பியது.



Tags : Attempted robbery
× RELATED நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கில் மேலும் 4 முக்கிய நிர்வாகிகள் கைது