×

பணக்கார குடும்ப பெண்களை சீரழித்தான் காசி வழக்கில் முக்கிய புள்ளிகளை விசாரிக்க போலீஸ் தயக்கம்

நாகர்கோவில்: காசியின் லேப்டாப் வீடியோக்களை ஆய்வு செய்ததில் பல பெரும் புள்ளிகளை விசாரிக்க வேண்டிய நிலை வரலாம் என்பதால், காவல்துறை தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது. குமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் கணேசபுரத்தை சேர்ந்தவர் காசி (24). இவர், சமூக வலைத்தளங்களில் தன்னை பணக்காரர்போல் காட்டி, 11, 12ம் வகுப்பு மாணவிகள் மற்றும் கல்லூரி மாணவிகள், இளம்பெண்கள் மட்டுமின்றி பல குடும்பங்களுடன் நெருக்கமாக பழகி உள்ளார்.  அந்த வகையில் பல பெண்களுடன் நெருக்கமாக இருந்து, ரகசியமாக வீடியோக்கள், போட்டோக்கள் எடுத்துள்ளார். இதைவைத்து பெண்களை மிரட்டி பலாத்காரம் செய்து வந்துள்ளார். இவர்களில் பாதிக்கப்பட்ட சென்னை பெண் டாக்டர் ஒருவர் போலீசில் புகார் கொடுத்தார். இதேபோல், மேலும் பெண்கள் புகார் அளித்தனர். இதன்பேரில், காசி கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.

 இதனிடையே, காசியை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர். அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட லேப்டாப்பில் 450 வீடியோக்கள் இருந்தது. இந்த வீடியோக்களில் உள்ள பெண்கள் யார் என்று தனிப்படையினர் விசாரித்து வருகின்றனர். தற்போது, வீடியோவில் உள்ள குடும்ப பெண்கள் சிலரின் அடையாளங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. இவர்களில் வி.ஐ.பி.க்களின் குடும்ப பெண்களும் உள்ளனர். குமரியை சேர்ந்த பிரபல பெண் டாக்டர் ஒருவருடன் காசி நெருக்கமாக உள்ள காட்சிகள் உள்ளன. இது தவிர பிரபல தொழிலதிபர் ஒருவரின் மனைவியுடனும் ஒன்றாக அமர்ந்திருக்கும் வீடியோக்கள் உள்ளன.  ஆனால் இவ்வாறு வீடியோக்கள் இருப்பது, சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரியாமல் இருந்துள்ளது. இவர்களை மிரட்டி பணம் பறிக்கும் வேலையில் காசி இறங்கினாரா என்பது தெரியவில்லை. காசியுடன் இவர்கள் மனமுவந்து பழகி வந்துள்ளனர் என்பது அந்த வீடியோக்களை பார்த்தாலே தெரிகிறது. இவர்களில் யாரும் இன்னும் புகார் அளிக்கவில்லை என போலீசார் கூறினர். தங்களது குடும்ப மானம் வெளியாகி கேவலப்படும் என்பதால், மிகவும் அமைதியாக உள்ளனர்.

குமரி மாவட்டம் மட்டுமின்றி கோவை, மதுரை, சென்னை பகுதிகளில் உள்ள பணக்கார வீட்டு பெண்களுடனும் காசி நெருக்கமாக இருக்கும் வீடியோக்கள் உள்ளன. மேலும் ஏராளமான பெண்கள் வீடியோ காலிங் செய்து பேசுகையில், காசி விருப்பப்படி  நடந்து கொள்ளும் காட்சிகளும் உள்ளன.  இந்நிலையில், பெரிய அளவில் முன்னேற்றம் இல்லாமல் இந்த வழக்கு மந்த கதியில் தான் உள்ளது. பெரிய, பெரிய குடும்பத்தினர், அதிகாரிகளை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வர வேண்டும் என்பதால் போலீஸ் தயக்கம் காட்டுகிறது. முக்கிய குற்றவாளியான காசியை கைது செய்து விட்டதால், மேற்கொண்டு வழக்கு விசாரணையில் ஆர்வம் இல்லாத நிலையில் காவல்துறை உள்ளது. எனவே வழக்கு விசாரணையை சிபிசிஐடி, சிபிஐக்கு மாற்றினால் பல தகவல்கள் கிடைக்கலாம் என சமூக ஆர்வலர்கள் கூறி உள்ளனர்.

Tags : Kasi ,family women , Rich family women, kasi, police
× RELATED ராஜபாளையம் தொகுதியில் புதிதாக அரசு...