×

தமிழகத்தில் மேலும் 447 பேருக்கு கொரோனா; இதுவரை இல்லாத வகையில் இன்று மட்டும் 939 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்: அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை: தமிழகத்தில் மேலும் 447 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 10,585 - ஆக உயர்ந்துள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் மே 17-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும், கொரோனா தொற்று அறிகுறியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு அடுத்தடுத்து நோய்த்தொற்று உறுதி செய்யப்படுவதால் கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 81,970-லிருந்து 85,940-ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,649-லிருந்து 2,752-ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 27,920-லிருந்து 30,153-ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் மேலும் 447 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது;

* தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 3,538 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த 939 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

* தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கை 74-ஆக உயர்ந்துள்ளது.

* இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 61 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 6,970 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

* தமிழகத்தில் உள்ள 12 மாவட்டங்களில் தலா 100-க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

* சென்னை மிகவும் நெருக்கமான மாநகரம் என்பதால் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது சவாலாக உள்ளது.

* தமிழகத்தில் குணமடைந்து வீடு திரும்பியவர்களுக்கு இதுவரை மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை.

* அனைத்து மாவட்டங்களிலும் பரிசோதனை அதிகமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதிக பரிசோதனைகள் மேற்கொள்வது நல்லது என மருத்துவக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

* சென்னையில் இன்று ஒரே நாளில் 332 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 6,278 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளதை கண்டு அச்சப்பட வேண்டாம் என மருத்துவக்குழு தெரிவித்துள்ளது.

* இந்தியாவிலேயே தமிழகத்தில் தான், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் விகிதம் மிகக்குறைவாக உள்ளது.

* தமிழகத்தில் கொரோனா இறப்பு விகிதம் 0.67% ஆக கட்டுக்குள் உள்ளது.

* தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 477 பேரில் 93 பேர் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள்.

* ஈரோடு மாவட்டத்தில் கடந்த 31 நாட்களாக கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை.

* திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 44 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 44 பேரும் மகாராஷ்டிராவில் இருந்து வந்தவர்கள்.

* தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 10,535 பேரின் சளி மாதிரிகள் பரிசோதித்ததில் 447 பேருக்கு தொற்று உறுதியானது.

Tags : Tamil Nadu ,Minister ,Department of Health , Tamil Nadu, Corona, Discharge, Department of Health
× RELATED தேர்தல் பத்திரம் குறித்து வாய் திறக்க...