டெல்லி: இந்தியாவிற்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு தேவைப்படும் வென்டிலேட்டர்களை வழங்க இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ள நிலையில் பிரதமர் மோடி அதற்கு நன்றி தெரிவித்துள்ளார். கொரோனா இல்லாத ஆரோக்கிய உலகை ஏற்படுத்த நாம் அனைவரும் இணைந்து உழைப்போம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.