×

ஆண்டிபட்டி அருகே தீயில் கருகி 20 ஆடுகள் பலி

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே கொட்டம் தீப்பிடித்து எரிந்ததில் 20 ஆடுகள் தீயில் கருகி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே  பாலசமுத்திரத்தைச் சேர்ந்தவர் வீரசூரன் (55). விவசாயி. இவர், தனது  வீட்டின் பின்புறம் கொட்டம் அமைத்து 25க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து  வந்தார். நேற்று மாலை ஆட்டுக்கொட்டத்தில் திடீரென தீப்பிடித்தது. உடனே  அக்கம்பக்கத்தினர் தீயை அணைக்க முயன்றனர். இதுகுறித்து ஆண்டிபட்டி  தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால், அவர்கள் வருவதற்கு முன்  கொட்டம்  முழுவதும் எரிந்து சாம்பலானது.

இந்த விபத்தில் 20 ஆடுகள் தீயில் கருகி  பலியாயின. சில ஆடுகள் பலத்த தீக்காயமடைந்தன. தீயை அணைக்க முயன்ற வீரசூரன்  காயமடைந்து, தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று  வருகிறார். தீயில் கருகி 20 ஆடுகளின் மதிப்பு சுமார் ரூ.2 லட்சம் என கூறப்படுகிறது. இதுகுறித்து ஆண்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அக்கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Antipatti Antipatti ,fire , 20 goats, killed , fire, Antipatti
× RELATED தீ தடுப்பு தொழிலக பாதுகாப்பு குழு கூட்டம்