×

ரேஷன் கடையை உடைத்து அரிசியைக் காலி செய்த ‘அரிக்கொம்பன்’ யானை

மூணாறு: மூணாறு அருகே ரேஷன் கடையை உடைத்து, அரிசியை காலி செய்த ஒற்றை யானையால் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பீதியில்
உள்ளனர். கேரள மாநிலம், மூணாறு அருகே ஆனையிறங்கல் அணைப்பகுதியில் தேயிலை தோட்டங்கள் அதிகமாக உள்ளன. இப்பகுதியில் உள்ள தொழிலாளர்கள் குடியிருப்புகளில் கடந்தாண்டு புகுந்த ‘அரிக்கொம்பன்’ என்னும் ஒற்றை யானை பல உயிர்களை காவு வாங்கியது. அதன்பின் நீண்ட காலமாக குடியிருப்பு பகுதிக்குள் வராத ‘அரிக்கொம்பன்’ யானை நேற்று முன்தினம் இரவு திடீரென தொழிலாளர்கள் குடியிருப்புக்குள் புகுந்தது. அங்கிருந்த ரேஷன் கடையின் முன்பகுதியை சேதப்படுத்திய யானை, உள்ளே நுழைய முயன்றது. ஆனால் முடியவில்லை.

இதையடுத்து அருகில் இருந்த கட்சி கொடிமரங்களை உடைத்தது. பின்னர் ரேஷன் கடையின் பின்பகுதி சுவரை இடித்து, உள்ளே வைத்திருந்த அரிசி மூட்டையை காலி செய்தது. யானையின் சத்தத்தை கேட்டு, தொழிலாளர்கள் அதை துரத்த முயன்றனர். அரிசியை உண்ட யானை அணையில் தண்ணீரை குடித்துவிட்டு, காட்டுப்பகுதிக்குள் சென்றது. இதையடுத்து தொழிலாளர்கள் நிம்மதியடைந்தனர். சுமார் 3 மணிநேரம் தொழிலாளர்களின் குடியிருப்பு பகுதிக்குள் இந்த யானை சுற்றித் திரிந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தூங்கிய ஊழியர் ‘எஸ்கேப்’
ரேஷன் கடையில் யானை புகுந்த சமயத்தில், அங்கு தூங்கிக் கொண்டிருந்த ஊழியர் சத்தம் போடாமல் இருந்ததால் அதிர்ஷ்டவசமாக தப்பினார். யானை சென்ற பின், தொழிலாளர்கள் அவரை மீட்டனர்.  அரிசியை விரும்பி உண்ணும் இந்த யானைக்கு அப்பகுதி மக்கள் ‘அரிக்கொம்பன்’ என பெயர் சூட்டியது குறிப்பிடத்தக்கது.

Tags : Arikkompan ,ration shop , The elephant m ration shopm, emptied ,rice
× RELATED குத்துக்கல்வலசை வேதபுதூரில் புதிய ரேஷன் கடைக்கு அடிக்கல் நாட்டு விழா