சென்னை: தமிழகத்தில் முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு தலா ரூ.2,000 உதவித்தொகை வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். முடிதிருத்துவோர் நலவாரியத்தில் உறுப்பினராக இல்லாதவர்களுக்கும் ரூ.2,000 நிவாரணம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். ஊரடங்கால் 50 நாட்களுக்கும் மேலாக முடிதிருத்தும் கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.