டெல்லி: வங்கக்கடலில் நிலைக்கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. மேலும் வலுவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று இரவு புயலாக மாற வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. புயல் நாளை ன்வரை வடமேற்கு திசை நோக்கி நகரும், பின்னர் திசையை மாற்றி வடக்கு வடகிழக்கு திசையில் நகர்ந்து செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.