×

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அமைச்சர் விஜயபாஸ்கர் திடீர் ஆய்வு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அரசு மருவத்துவமனையில் சுதாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் தங்கியுள்ள வார்டுகளை  ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை  சந்தித்த அவர் கூறுகையில், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் 300 படுக்கை வசதிகள் கொண்ட  கொரோனா தடுப்பு சிகிச்சை வார்டு   தயார் நிலையில் உள்ளது. மருத்துவ கண்காணிப்பில் உள்ளவர்களை மாவட்ட நிர்வாகத்தோடு இணைந்து மருத்துவமனை முதல்வர் தலைமையில் மருத்துவ குழுவினர் கொரோனா பாதித்தவர்களை ரோபாட் இயந்திர உதவியுடன் சிறப்பாக கவனித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதன் மூலம் ஊழியர்களுக்கு நோய்தொற்று ஏற்படாமல் பாதுகாக்கப்படுகிறது  என்றார். இதில் மாவட்ட கலெக்டர் அ.ஜான்லூயிஸ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெ.கண்ணன், மருத்துவமனை முதல்வர் சாந்திமலர்,  நிலைய மருத்துவ அலுவலர் அனுபாமா உள்பட பலர்  பங்கேற்றனர்.



Tags : Vijayabaskar ,visit ,Chengalpattu ,Chengalpattu Government Hospital , Chengalpattu Government Hospital, Minister Vijayabaskar, Corona
× RELATED நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு 3 நாட்களுக்கு டாஸ்மாக் மூடல்