×

மீன்பிடி வலைகள் தீயில் எரிந்த சம்பவம்: பாஜவினர் நேரில் ஆறுதல்

பொன்னேரி: திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு திருமலை நகர் பகுதியில்  கடந்த 11ம் தேதி ₹75 லட்சம் மதிப்பிலான மீன் வலைகள் தீயில் எரிந்து நாசமானது.  இதனால் பாதிக்கப்பட்ட மீனவர்களை நேற்று தமிழக பாஜ மீனவரணி தலைவர் சதிஷ்குமார், பாஜ தேசிய பொதுக்குழு உறுப்பினர் ஆர்.எம்.ஆர்.ஜானகிராமன் மற்றும் மாவட்ட தலைவர் ராஜா ஆகியோருடன்  நேரில் சென்று மீனவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

மேலும், அவர்களுக்கு   வங்கி மூலம் கடன் உதவி வழங்கி மீன் வலைகள் பெற்றுத்தரவும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். ஊரடங்கு காரணமாக பாதித்துள்ள 500  மீனவ குடும்பங்களுக்கு மீன்பிடி தொழில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். அப்போது,  கிழக்கு மாவட்ட பாஜ பொதுச்செயலாளர்  ஏ.கே.மூர்த்தி, மாவட்டச் செயலாளர் நந்தகோபால் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Tags : Bajawans ,BJP , Fishing nets, BJP, pallets
× RELATED கோவை தொகுதியில் வாக்காளர்களுக்கு...