×

களப்பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

ஆலந்தூர்: சென்னையில் கொரோனா பரவலை தடுக்கவும், நோய் தொற்று உள்ளவர்களை கண்டறியவும் மாநகராட்சி சார்பில் ஒப்பந்த அடிப்படையில் களப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில், ஆலந்தூர் மண்டலம் 164வது வார்டுக்கு உட்பட்ட நங்கநல்லூரில் பணிபுரியும் 35க்கும் மேற்பட்ட களப்பணியாளர்கள் தங்களுக்கு ஊதியம் வழங்காததை கண்டித்து நேற்று பணியை புறக்கணித்து   ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த  மாநகராட்சி உதவி பொறியாளர் மற்றும் பழவந்தாங்கல்  போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம், சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் பேசி சம்பளம் வழங்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தனர். இதையடுத்து, களப்பணியாளர்கள்  மீண்டும் பணிக்கு திரும்பினர்.



Tags : demonstration ,Fieldworkers , Fieldworkers, Demonstration, Corona
× RELATED காங்.கட்சியினர் ஆர்ப்பாட்டம்