×

சிக்கிமில் பனிச்சரிவு: ராணுவ அதிகாரி, வீரர் புதைந்து பலி

புதுடெல்லி: சிக்கிம் மாநிலத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த ராணுவ அதிகாரியும், வீரரும் புதைந்து உயிரிழந்தனர்.
வடக்கு சிக்கிமில் உள்ள லுக்னாக் மலைப்பகுதியில் ராணுவ வீரர்கள் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். 18 வீரர்கள் கொண்ட குழு ரோந்து பணியில் இருந்தபோது எதிர்பாராத விதமாக திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் வீரர்கள் பலர் சிக்கினர். இது குறித்து தகவல் அறிந்த ராணுவ வீரர்கள் குழு அங்கு விரைந்தது. பனிக்கட்டிகள் அடியில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.  இந்த விபத்தில் ராணுவ அதிகாரி லெப்டினன்ட் கர்னல் ராபர்ட், வீரர் சண்முக ராய் ஆகியோர் பனியில் புதைந்து உயிரிழந்தனர்.


Tags : Army officer ,soldier ,officer ,Army , Sikkim avalanche, army officer, soldier, killed
× RELATED மக்களவை தேர்தலில் வாக்களிக்க...