புதுடெல்லி: டெல்லியில் பிதம்புரா பகுதியை மையமாகக் கொண்டு நேற்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 2.2 புள்ளிகளாக பதிவானது. இதற்கு முன்பு கடந்த 10ம் தேதி வாசிர்பூர் பகுதியில் வாசிர்பூர் மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் கடந்த ஏப்ரல் 12, 13 தேதிகளில் முறையே 3.5 மற்றும் 2.7 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.ஒரே மாதத்தில் 4வது முறையாக நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதி அடைந்தனர்.