×

வாட்ஸ்அப் மூலம் உறவினர்களுடன் நளினி, முருகன் பேச அனுமதி கோரி வழக்கு

சென்னை:  முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி மற்றும் முருகன்  சார்பாக சென்னை  உயர் நீதிமன்றத்தில் நளினியின் தாயார் பத்மா ஆட்கொணர்வு மனு ஒன்றை  தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில்,   இலங்கையில் உள்ள முருகனின் தாயார் சோமனியம்மாளிடமும், இங்கிலாந்தில் உள்ள மூத்த சகோதரியிடமும் வாட்ஸ் அப் வீடியோ கால் மூலம் தினமும் 10 நிமிடங்கள் பேச அனுமதி அளிக்கும்படி உத்தரவிட வேண்டும்.

மேலும் கடந்த வாரம் இயற்கை எய்திய  தந்தையின் உடலை வீடியோ கால் மூலம் பார்க்க முருகனுக்கு அனுமதி அளிக்குமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், ஹேமலதா அமர்வு இந்த வழக்கு குறித்து 2 வாரத்திற்குள் பதிலளிக்குமாறு தமிழக அரசு மற்றும் சிறைத்துறை உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்துள்ளனர்.

Tags : Nalini ,Murugan ,relatives ,WhatsApp Nalini , WhatsApp, Nalini, Murugan, Rajiv murder
× RELATED முருகன் பாஸ்போர்ட் பெற நேர்காணலுக்கு...