புதுடெல்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று வெளியிட்ட டிவிட்டர் பதிவில், `ஊரடங்கு உத்தரவால் மே 16ம் தேதியில் இருந்து புதிதாக கொரோனா தொற்று பரவாது என்பதை உறுதிபடுத்தி நிதி ஆயோக் மேதைகள் திட்ட வரைபடத்துடன் கணித்தனர். கொரோனாவை எதிர்கொள்ள அரசு தயாராவது இப்படி தானா? நாளை (இன்று) மே 16ம் தேதி என்பதை அவர்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். நிதி ஆயோக் உறுப்பினர்கள், மேதைகள் என்பதை மீண்டும் நிருபித்துள்ளனர்,’ என கூறியுள்ளார்.