சேலம்: சேலம் மாவட்டத்தில், 35 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதில் ஏற்கனவே குணமடைந்து 33 பேர் வீடு திரும்பி விட்டனர். நேற்று கெங்கவல்லி, ஓமலூரை சேர்ந்த இருவர் குணமடைந்தனர். அவர்கள் இருவரும் நேற்று மதியம் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். இதனால் கொரோனா பாதிப்பே இல்லாத மாவட்டம் என்ற பெருமையை சேலம் பெற்றுள்ளது. இதுகுறித்து, சேலம் மாவட்ட கலெக்டர் ராமன், செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘சேலம் மாவட்டத்தில் கொரோனா சிகிச்சையில் இருந்த அனைவரும் குணமடைந்து வீட்டிற்கு திரும்பியுள்ளனர். இதனால் கொரோனா தொற்று எதுவும் இல்லாத மாவட்டமாக சேலம் மாறியுள்ளது’’ என்று கூறினார்.