சென்னை: 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் வசதிக்காக கூடுதல் தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தேர்வறையில் 10 மாணவர்கள் அமர வைக்கப்படுவார்கள். 3,087 தேர்வு மையங்களுடன் கூடுதலாக 5,000 மையங்கள் என 8,087 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தப்பட்ட பகுதி மாணவர்களுக்கு அவரவர் வசிக்கும் பகுதியிலேயே மையம் அமைக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.