×

கொரோனா பரவலை தடுக்க மருத்துவமனைகளுக்கான நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு

சென்னை: கொரோனா பரவலை தடுக்க மருத்துவமனைகளுக்கான நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

அனைத்து பணியாளர்களுக்கும் கொரோனா குறித்து பயிற்சி அளித்திருக்க வேண்டும்.

இறந்தவர்களின் உடலை கையாளும் விதம், மருத்துவ உபகரணங்களை அறிந்திருக்க வேண்டும்.

அனைத்து வாயில்களிலும் கைகழுவ வசதியாக குழாய் நீருக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

மருத்துவமனைக்கு வரக்கூடிய அனைவருக்கும் கண்டிப்பாக முகக்கவசம் வழங்க வேண்டும்

தனிமைப்படுத்தப்பட்ட அறைகள் இருக்க வேண்டும்; அதற்கென தனிப்பாதை இருக்க வேண்டும்.

மருத்துவமனை முழுவதும் தனிமனித இடைவெளி கடைபிடிக்க வேண்டும்

எந்த காரணத்திற்காகவும் மருத்துவமனைக்குள் பார்வையாளர்களை அனுமதிக்க கூடாது.

ஆம்புலன்ஸ், கழிவறைகளை சுத்தம் செய்வதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Tags : Government of Tamil Nadu ,corona spread ,hospitals ,dissemination , Corona, Hospital, Ethics, Government of Tamil Nadu
× RELATED தமிழ்நாடு அரசின் 108 கட்டுப்பாட்டு...