×

வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்த 2 பேர் கைது

பூந்தமல்லி: சென்னையை அடுத்த திருவேற்காடு, பல்லவன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் தியாகராஜன்(36). இவரது மனைவிக்கு பிரசவம் என்பதால் ஊரடங்கு உத்தரவு நேரத்தில் மனைவியை அழைத்துக்கொண்டு திருவாரூர் சென்று விட்டார். கடந்த மூன்றாம் தேதி இவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதாக திருவேற்காடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வீட்டை சோதனை செய்தபோது பீரோ உடைக்கப்பட்டு 5 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து திருவேற்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து கொள்ளையர்களை தேடி வந்தனர்.

இந்த நிலையில் திருவேற்காடு பகுதியைச் சேர்ந்த சவுந்தர்(21), பூபதி(21), ஆகிய இருவரையும் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை செய்தபோது ஊரடங்கு நேரத்தில் செலவுக்கு பணம் இல்லாத காரணத்தால் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை அடித்ததை ஒப்புக்கொண்டனர்.  இவர்களிடமிருந்து 5 சவரன் நகையை போலீசார் பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags : burglary Burglary , Robbery, 2 arrested
× RELATED சேலம், அணைக்கட்டில் வீடு, வீடாக சென்று...