திருவள்ளூர்: திருவள்ளூர் ஜெயா நகர் மற்றும் விரிவாக்கப் பகுதிகளின் குடியிருப்போர் நல சங்கம் சார்பில் கொரோனா வைரஸ் தொற்று நோயையும் பொருட்படுத்தாமல் பணியாற்றிவரும் நகராட்சி தூய்மை பணியாளர்களின் சேவையை பாராட்டி மளிகைப் பொருட்கள், அரிசி காய்கறிகளை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. குடியிருப்பு நல சங்க தலைவர் எஸ்.முனிரத்தினம், தலைமை தாங்கினார். துணைத் தலைவர் எல்.சந்திரசேகர், செயலாளர் எம்.சுரேஷ்குமார், பொருளாளர் டிஆர்எஸ்.சந்துரு முன்னிலை வகித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் நல சங்க உறுப்பினர்கள் ஏ.பலராமன், கே.கதிர்வேலு, ஜி.சிவகுமார், எஸ்.கிருஷ்ணமூர்த்தி, மணி முதலியார், தாமஸ் என்ற ஜி.ஆர்.ராஜ்குமார், கோவிந்தராஜ், எஸ்.சாந்தமூர்த்தி, வி.கே.சீனிவாசன், ரங்கநாதன், ரவி, சரவணன், எம்.பாலாஜி, சி.பாபு, வி.வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.